skip to main |
skip to sidebar
நாடு என்ன செய்தது நமக்கு? என கேள்விகள் கேட்பது எதற்கு? நீ என்ன செய்தாய் அதற்கு? என கேட்டால் ...? நாட்டுக்கு நல்லதை அப்புறம் செய்வோம். முதலில் நாம் பிறந்து வளர்ந்து வாழும் ஊருக்கு நல்லது செய்வோம் என மனதில் தோற்றியதின் விளைவே இன்றைய புதிய பதிவு.கூகுளில் சென்று திருக்கழுக்குன்றம் Thirukalukundram என தேடினால் போதிய விவரம் கிடைக்கவில்லை. எனவே நமது ஊருக்கு என்று தனியே வலைபதிவு ஓன்றை துவங்கி அதில் ஊரின் புகைப்படங்கள்.கோயில் திருவிழாக்கள். முக்கிய நிகழ்வுகள்.ஊரின் வரலாறுகள் போடலாம் என்று உள்ளேன்.
புதிய வலைப்பதிவின் முகவரி-திருக்கழுக்குன்றம்.
http://thirukalukundram.blogspot.com/
இந்த பதிவினை போட்டுமுடித்ததும் மனம் அளவில்லா ஆனந்தம் அடைந்தது. எனது பதிவிற்கு ஆதரவும் ஆலோசனையும் கருத்துக்களையும் தரும் அனைவரும் இந்த புதிய வலைதளத்திற்கும் வந்து உங்கள் மேலான ஆதரவைதருவீர்கள் என எண்ணுகின்றேன்.ம...அப்புறம் இந்த பதிவு எனது 325 ஆவது பதிவு. தொடர்நது உங்கள் ஆதரவையும் அன்பையும் வேண்டி.....
வாழ்க வளமுடன்.
வேலன்..
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்