அப்பா என்ற வார்த்தைக்கு முழு அர்த்தமாய்
வாழ்ந்த உங்களுக்கு எங்கள் ஊன் ,உடல் ,வாழ்க்கை,
மலராய் சமர்ப்பிக்கிறேன் !
நான் பிறந்தது முதல் தங்கள்
மூச்சுகாற்று-19.10.2011 -பிரியும்வரை-எங்கள் சுவாசமாய்
வாழ்ந்த தந்தையே !
உங்களுக்கு எங்கள் கண்ணீரை அஞ்சலியாக அர்பணிக்கின்றோம்!
ஒருவர் வாழ்வில் நல்ல தந்தையாக எவ்வாறு
வாழவேண்டும் என்று முன்னுதாரனமாய்
நல்ல தந்தையாக வாழ்ந்து காட்டிய உங்களுக்குஎங்கள் கண்ணீரை அஞ்சலியாக்குகின்றோம் .
நீங்கள் எங்களுக்கு நல்ல தந்தையாக மட்டுமின்றி
நல்ல ஆசிரியராகவும் ,ஒழுக்கம்,கட்டுப்பாடு ,
உதவும் மனப்பான்மை ,விட்டு கொடுத்து வாழ்தல் .
நன்றி மறவாமை ,பிறரை மதித்து வாழ்தல்,துன்பம் வரும்வேளையிலும் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளுதல் ,மற்றும்
அனேக விசயங்களை எங்கள் தோழனாய் எங்கள் தோள்மீது
கை போட்டு கற்றுகொடுத்த தந்தை எனும்
எங்கள் உயிர் தோழனை நாங்கள் இழந்து தவிக்கிறோம் .
காற்றில் கலந்த எங்கள் உயிர் தோழனே !
உன்னை காற்றில் தேடி அலைகின்றோம் !
என் உடலில் தோள்கள் இருந்ததை தங்கள்
இழப்பிற்கு பின் தான் உணர்ந்தோம் !
ஏனென்றால் எங்கள் தோள்கள் மீது பாரம்
ஒரு நாளும் நான் உணர நீங்கள் வாய்ப்பு அளிக்கவில்லையே !
ஒளி நட்சத்திரமாய் வெளிச்சம் கொடுத்த உங்களை !
இறுதி சடங்கு என்ற பெயரில் உங்கள் உடலை எங்கள் கைகளால்
அக்னி பிழம்புக்கு ஒப்படைத்த போது ,
பூமி உருண்டை எங்கள் கால்களை விட்டு விலகி சென்றது !
மறு நாள் சிறு குடுவைக்குள் உங்களை சாம்பலாய்
பெற்றுகொண்டபோது எங்கள் மனம் எரிமலையாய் அக்னி
பிழம்பாய்வெடித்து சிதறியது .எங்களை மன்னிப்பீர்களா தந்தையே !
அடுத்தவேளை உணவுக்கு வழியில்லாமல் வந்தவருக்கு உதவிட இடம்கொடுத்த உத்தமரே.இடம் கொடுத்தால் மடத்தை பிடுங்கும் இனப்பிறவிகள் அவர்கள் என்பது உங்களுக்குபுரியாதது ஏன்?
நல்லவர்களை இறைவன் கைவிடுவதில்லை....நீதி இறுதியில் வெல்லும்.உங்கள் ஆன்மா நிம்மதி அடையட்டும்.
வாழ்நாளில் நாங்கள் அறியாமல் தவறு செய்திருந்தால்
எங்களை மன்னிக்கவும் ,
எங்களை விட்டு உடலால் பிரிந்தாலும்
எங்கள் மூச்சு கற்றாய் உங்கள் நினைவுகளுடன் வாழ்வோம்.
தங்கள் மலர் பாதங்களை வணங்கி மலர்களை சமர்பித்து வணங்குகிறோம்,,,,,,,,,,
அன்பு மகன்கள்.....
க.மூர்த்தி.
க.சரவணன்.
க.வேலன்.