திருக்கழுக்குன்றத்தில் நண்பகலில் மலைமீது இரண்டு கழுகுகள் தினமும் வந்து உணவருந்தி செல்லும்.அதன் காரணமாகவே ஊருக்கு திருக்கழுக்குன்றம் என பெயர் வந்தது. புகைப்படம் மூலமே இதுவரை கண்டு களித்தவர்கள் இந்த வீடியோ மூலம் கழுகுகள் வந்து உணவருந்தும் காட்சியை கண்டு ரசிக்கலாம்.வீடியோ கேமரா அவ்வளவாக வராத காலத்திலேயே இந்த வீடியோவினை எடுத்து வைத்துள்ளார்கள்.இந்த வீடியோவினை காலத்தால் அழியாத இணையத்தில் பதிவேற்றுவதன் மூலம் வரும் சந்ததியினரும் இதன் அருமையை அறிந்துகொள்ளலாம்.சில பதிவுகள் நமக்கு பூரண மன அமைதியையும் மகிழ்ச்சியையும் தரும். இந்த வீடியோவினை பதிவிடுவதில் நான் மகிழ்ச்சியையும் மன நிம்மதியையும் அடைகின்றேன்.
வீடியோவினை கண்டு களித்தவர்களுக்கும் வீடியோ உதவிய calicocentric நண்பரருக்கும் மனமார்ந்த நன்றி .
வாழ்க வளமுடன்
வேலன்.